இறைவனை சிந்திக்காதவர்கள்

இறைவனை சிந்திக்காதவர்கள் இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில்(பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

Thursday, April 21, 2011

மனிதன் குரங்கிலிருந்து தோன்றினானா?


   பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.

கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்றுகிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.
சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!

Tuesday, March 29, 2011

ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முடியுமா ?


ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், அல்லாஹ்வுடைய தூதர் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தவே வந்தார்கள் என்றும் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் இயங்குகின்றனர். இவர்கள் ஜனநாயக முறையை முழுக்க முழுக்க எதிர்க்கின்றனர். இந்தக் கொள்கையைப் பற்றிய முழு விளக்கத்தையும், இது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியா என்பதையும் விளக்கவும்.

ஒற்றுமையின் மூலம் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ எந்த இடத்திலும் கூறப்படவேயில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவே வந்தார்கள் என்று கூறுவது, இறைவன் மீது இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலாகும்.

Wednesday, March 23, 2011

இளைஞர்களின் கணவு படிப்பு – MBA என்றால் என்ன ??

ஸலாமுன் அழைக்க ...


இன்றைக்கு பொறியியல் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி கலை, வணிகவியல் மற்றும் அறிவியல் சார்ந்த மாணவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அடுத்து தேர்ந்தேடுக்க விரும்பும் கணவு மேற்படிப்பு Master Of Bussiness Administration (MBA) என்பதாகும்.


இதற்க்கு சாண்றாக தமிழகத்தில் வளர்ந்து வரும் MBA படிப்புகளுக்கான கல்வி நிறுவணங்கள் உள்ளது. மருத்துவர் , என்சினியர் வழக்கறிஞர் என்ற வரிசையில் ஏன் அதற்க்கும் மேலாக மதிப்பும் மரியாதையும் கொண்ட துறையாக இது வளர்ச்சி பெற்று இருக்கின்றது
.

Tuesday, March 15, 2011

ஆழ்கடலில் அலைகளும், இருள்களும் - சுனாமியால் நாம் கற்க வேண்டிய படிப்பினை...!

24:40 அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்.  
அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கும் மேல் மேகம். (இப்படி) 
பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை 
வெளியே நீட்டீனால் அவனால் அதைப் பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை 
ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.






நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் தந்தைக்கும் அவர்களின் பாட்டனாருகும் எந்த நபியும் அனுப்பப்படவில்லை. எந்த நபியின் போதனையும் அவர்களைச் சென்றடையவில்லை.
இதை திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது
ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக! . (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். . (நீர்) நேரான பாதையில் இருக்கிறீர். . கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.
திருக்குர்ஆன் 36: 2-6
ஆனாலும் அவர்கள் ஸாபியீன்களாக இருந்திருக்க வேண்டும்.

Saturday, March 12, 2011

இணை வைத்தல் அன்றும், இன்றும்

            அன்றைய அறியாமை காலத்தில் 360 சிலைகள் நிரம்பிய கஃபாவில், முஆவியா கோத்திரத்தார் கொடுத்த ஹுபைல் சிலையே பிரதானமானது. அடுத்து குறைஷியரின் பெருமைக்குறிய ஆலயங்களாக மூன்று விளங்கின.”கடவுளின் பெண் மக்கள்” என்று பக்தியோடு வணங்கப்பட்ட லாத், உஸ்ஸா, மனாத் கோவில்களாகும்.


Thursday, March 3, 2011

குழந்தைகளுக்கான மதரஷா விரைவில்..!

www.pdmtntj.com

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (புதுமடம் கிளை) சார்பில் குழந்தைகளுக்கான மதரஷா விரைவில் தொடங்கபட உள்ளது . இதில் தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்புவோர் கிளை செயலாளர் நலீம் அவர்களை தொடர்பு கொள்ளவும்(cell : 9043727544)
 

துவங்கியது TNTJ மாநில தலைமையகத்தில் 30 நாள் பேச்சாளர் பயிற்சி முகாம் .

இறைவனின் மகத்தான அருளைக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சத்திய பிரச்சாரப் பணியை எவ்வித தயக்கமுமின்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் காட்டிய அடிப்படையில் மிக வீரியமாக முஸ்லிம்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி வருகின்றது.
இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளிலும், தமிழகத்திற்கு வெளியேயும், வெளிநாடுகளிலும் இந்த ஜமாஅத் மகத்தான வளர்ச்சி கண்டுவருவது நாம் அனைவரும் அறிந்ததே! அல்ஹம்துலில்லாஹ்!


Monday, February 28, 2011

அல்லாஹ் உருவமற்றவனா?


                                              -ஓர் ஆய்வு

 

       தொடர் - 2:

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....


இறைவனுக்கு இரு கைகள்:

எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு இரு கைகள் இருப்பதைத் திருக்குர்ஆனில் தெரிவிக்கிறான்.
"எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.
அல்குர்ஆன் 38:75


அல்லாஹ்வுக்குக் கைகள் இருப்பதைத் தெரிவிக்கும் வசனமாகும். இப்போது இது குறித்த ஹதீஸ்களைப் பார்ப்போம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் மறுமை நாüல் மக்கüன் தலைவன் ஆவேன். (மறுமை நாüல்) அல்லாஹ் (மக்கüல்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெüயில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), "நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்பார்கள். மக்கள் சிலர், "உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)'' என்று கூறுவார்கள்.
ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்கüடம் சென்று, "ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களைச் சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று கேட்பார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3340
இது ஆதம் நபியிடம் மக்கள் கூறுகின்ற கருத்தாகும். இதில், அல்லாஹ் தன் கையால் உங்களைப் படைத்தான் என்று மக்கள் கூறுவதிலிருந்து இறைவனுக்குக் கைகள் இருப்பதை அறிய முடியும்.